Categories: Cricket

ஓய்வுக்கு பிரேக்.. மீண்டும் களமிறங்கப் போகும் டேவிட் வார்னர் – எப்போ தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்பட்டால் அணிக்காக விளையாட தயார் என்று அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டேவிட் வார்னரை அவசரத்திற்கு ஆப்ஷனாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய டேவிட் வார்னர் ஜூன் 24 ஆம் தேதியுடன் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்ற பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்தார். டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

ஓய்வு குறித்து சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் டேவிட் வார்னர் கூறும் போது, “சாப்டர் முடிந்தது. நீண்ட காலம் மிக உயரிய இடத்தில் விளையாடியது நம்பமுடியாத அனுபவம். ஆஸ்திரேலியா எனது அணியாக இருந்தது. பெரும்பாலும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் தான் விளையாடி இருக்கிறேன். இதை செய்ய முடிந்ததை பெருமையாக நினைக்கிறேன்.”

“அனைத்து வித கிரிக்கெட்டிலும் 100 போட்டிகள் விளையாடியதே எனது ஹைலைட். சில காலத்திற்கு பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் மீண்டும் விளையாடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பேட் கம்மின்ஸ் கடந்த ஜனவரி மாதம் பதில் அளித்திருந்தார். அப்போது, “இந்த விஷயத்திற்கு நேரம் கொடுப்பது அவசியம் ஆகும். எனினும், அவர் எப்படி இருந்தாலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருப்பார். அந்த வகையில், அவரை தேர்வு செய்வது அவசர கால முடிவாக இருக்கும்.”

“எப்படி இருந்தாலும் அவர் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் ரன்களை விளாசி கொண்டுதான் இருப்பார். அந்த வகையில், இது தான் முடிவு என்று எப்போதும் நினைத்துவிட முடியாது,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?…சாம்சங் போராட்டம் குறித்து அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை…

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…

3 days ago

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…

3 days ago

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…

3 days ago

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…

3 days ago

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…

3 days ago

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…

3 days ago