பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம் சமீப கால டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஃபார்ம் குறித்து ஏராளமான கருத்துக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பாபர் அசாம் பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார்.
இதுவரை மூன்று இன்னிங்ஸில் ஆடியுள்ள பாபர் அசாம் 0, 22 மற்றும் 31 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக பாபர் அசாம் ஃபார்ம் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, பாபர் அசாம் விவகாரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரராக பாபர் அசாம் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. சமீப காலங்களில் அவர் ரன் குவிக்க முடியாமல் தவிக்கிறார். அவர் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தவிர மற்ற வகை போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது பாபர் அசாமுக்கு அழுத்தமாக மாறுவதாக தெரிகிறது என்றார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தினேஷ் கார்த்திக், “வீரராக பாபர் அசாம் தரம் குறித்து யாரும் சந்தேகப்பட முடியாது. அவரிடம் அசாத்திய திறமை உள்ளது, எனினும், தற்போது அவர் ஏராளமான அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் அந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”
“வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் முன்கூட்டியே டிக்ளேர் செய்ததாக நான் நினைக்கிறேன். ஆசியாவில், நீண்ட நேரம் பேட்டிங் செய்வது, முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் பேட் செய்வது அவசியம்,” என்று தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…