பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் துலீப் கோப்பை 2024 தொடரின் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதுகின்றன. போட்டியின் போது இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜெர்சியை டேப் செய்து அணிந்துள்ள சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.
தான் வழக்கமாக அணியும் “77” எண் கொண்ட ஜெர்சி கிடைக்காததால் சுப்மன் கில் வேறொரு வீரரின் ஜெர்சியை வாங்கி அணிந்து கொண்டு விளையாடியுள்ளார். இவ்வாறு செய்யும் போது வேறு ஜெர்சி எண் காரணமாக எந்த குழப்பமும் ஏற்பட கூடாது என்பதில் சுப்மன் கில் உறுதியாக இருந்துள்ளார்.
இதன் காரணமாகத் தான் சுப்மன் கில் டேப் செய்யப்பட்ட ஜெர்சி அணிய காரணம் என்று கூறப்படுகிறது. அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்திய எண் என்பதால் சுப்மன் கில் தனக்கு ஏழு அடங்கிய ஜெர்சி சாதகமாக இருக்கும் என்று உணர்கிறார். இதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் பயன்படுத்த வேண்டும் என்று கருதிய சுப்மன் கில் “77” ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
துலீப் கோப்பை தொடரில் வைத்து சுப்மன் கில் கேப்டனாக எப்படி செயல்படுகிறார் என்பதை பரிசீலனை செய்யப்படுகிறது. இந்தியா ஏ அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதன் காரணமாக இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன்பிறகு முஷீர் கான் மற்றும் நவ்தீப் சைனி இந்தியா பி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…