Categories: Cricket

பயிற்சியில்லாம வந்துட்டாரு போல.. கோலியை சீண்டிய முன்னாள் பாக். வீரர்

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி சோபிக்கவில்லை. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார். மேலும், மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து பேச வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். கேப்டன் தன் பங்கிற்கு கூறிவிட்ட போதிலும், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் இந்திய தோல்விக்கு அதிருப்தி தெரிவித்தனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வீரர் விராட் கோலியை கடுமையாக சாடினார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பசித், “விராட் கோலி போன்ற உலகின் முன்னணி பேட்டர் இரண்டு முறை LBW மூலம் அவுட் ஆகி இருக்கிறார். இதுபோன்ற விஷயங்கள் அய்யர் அல்லது துபே ஆகியோருக்கு நடக்கலாம். ஆனால் விராட் கோலி ஒரு விராட் கோலி. இதன் மூலம் அவர் பயிற்சியில் இல்லை என்றே தெரிகிறது.”

“இந்த பேட்டிங் ஆர்டர் உலக கிரிக்கெட்டை ஆளுவதாக தெரியவில்லை. ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் கூட சரியாக பயிற்சி எடுக்கவில்லை என்றே உணர்கிறேன். இவர்கள் முறையாக பயிற்சி எடுக்காமலேயே வந்துவிடுகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துக்களின் படி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே விளையாடியது. இந்த போட்டியில் 249 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை.

இந்திய அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் 6 ரன்களுக்கும் அடுத்து வந்த ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 20 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். விராட் கோலி மறுபுறம் 18 பந்துகளில் 20 ரன்களையும், ரியான் பராக் 13 பந்துகளில் 15 ரன்களையும் அடித்தனர்.

Web Desk

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

7 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

28 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago