வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 1 நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் ஆட்ட நாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ஆட்டநாயகன் சுப்மன் கில் “நான் இந்த போட்டியில் பொறுமையாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினேன் . என் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் நான் என்னுடைய பேட்டிங்கில் பதில் கொடுக்க விரும்பினேன் . ஆனால் நான் நினைத்தது போல போட்டி சுலபமாக இல்லை பந்து பல பழையதாக இருந்ததால் பெட்டிற்கு மிகவும் மெதுவாக தான் வந்தது.
எப்படியோ நன்றாக பேட்டிங் செய்து ஒரு நல்ல ஸ்கோரை அடித்து விட்டேன் என நான் நினைக்கிறேன் . இந்த போட்டியில் நான் அருமையாக விளையாடவேண்டும் என்பதாகவே பெரிய பெரிய ஷாட்கள் ஆடாமல் நிதானமாக விளையாடினேன். மொத்தத்தில் இந்திய அணி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .
இந்த போட்டியில் நான் எந்த அளவிற்கு அருமையாக விளையாடினேனோ அதே அளவிற்கு அடுத்ததாக வரும் போட்டிகளில் நான் நிச்சயம் நன்றாக விளையாடுவேன்” என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. நாளை டி20 போட்டி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…