இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். குல்தீப் ஏற்கனவே விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முக்கிய உறுப்பினராக தன்னை நிரூபித்துள்ளதால், குல்தீப் தனது திறமைகளை மிக நீண்ட ஆட்டத்தில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் எனவும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகதிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அனில் கும்ப்ளே ” டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் கடந்த சில போட்டிகளில் அருமையாக செயல்பட்டுள்ளார். தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் கிட்டத்தட்ட ஒரு போட்டியில் 3 விக்கெட்கள், 5 விக்கெட்கள் என தன்னுடைய திறமைகளை நிறுத்துபித்து காட்டியுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய அணியில் ஸ்பின்னர்கள் குறைவாக இருப்பது வருத்தமாக இருக்கிறது.
குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் .அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதால் அவர் கண்டிப்பாக நமது அணியில் இருக்க வேண்டும். குல்தீப் யாதவ் போன்ற லெக் ஸ்பின்னர்கள் அணியில் இருந்தால் அதுவும் ஒரு வகையில் அணிக்கு பக்க பலமாக இருக்கும். இப்போது நம்மளுடைய அணியில் இருக்கும் ஸ்பின்னர்களை நான் குறைகூறவில்லை.
அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அருமையாக பந்து வீசினார்கள் அஸ்வின் பல சாதனைகளை படைத்தார் அதற்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துக்கள் பந்து வீச்சை போலவே அவர்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களை போலவே, குல்தீப் யாதவை அணியில் அவர்களுடன் சேர்த்து வைத்திருக்க வேண்டும்” எனவும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…