ஸ்காட்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி தொடரை ஓயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது.
இந்த தொடரின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக ஆஸ்திரேலியா அணி தயார்படுத்திக் கொண்டது. இதனிடையே ஸ்காட்லாந்து பயிற்சியாளர் டௌக் வாட்சன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த தொடர் எங்களது வீரர்களுக்கும் கடுமையான ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும், இதில் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருந்தன.
“தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. வீரர்கள் ஏமாற்றம் அடைந்த போதிலும், அவர்கள் பெருமையாக உள்ளனர். இதன் மூலம் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலகத் தரம் வாய்ந்த எதிரணியுடன் விளையாடுகிறோம் என்று எங்களுக்கு தெரியும்.”
“பேட்டிங் விஷயம் முழுமையாக பார்ட்னர்ஷிப்களை சார்ந்தது ஆகும். அனைத்து போட்டிகளிலும் எங்களால் 40 ரன் பார்ட்னர்ஷிப் கூட எடுக்க முடியவில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டோம், அதை நாங்கள் அதிகளவு செய்தது இல்லை. நாங்கள் வீரர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டோம். இதனால் அவர்கள் இந்த அளவுக்கு போட்டியிட்டனர்,” என்று ஸ்காட்லாந்து பயிற்சியாளர் டௌக் வாட்சன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…