இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.
“ரோகித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடலாம். விராட் கோலியின் ஃபிட்னஸ் அனைவரும் அறிந்ததே. அவர் மிக எளிதில் ஐந்து ஆண்டுகள் வரை விளையாடுவதை பார்க்க முடியும். அணியில் ஃபிட்டான வீரர்களில் ஒருவர் விராட் கோலி.”
“நீங்கள் 19 வயதுடைய வீரரை விராட் கோலியுடன் போட்டியிட சொன்னாலும், விராட் அதில் வெற்றி பெறுவார். அவர் அந்த அளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார். விராட் மற்றும் ரோகித்-இடம் இன்னும் அதிகளவு கிரிக்கெட் மீதமுள்ளது என நம்புகிறேன். ஆனால், இது முழுக்க முழுக்க அவர்கள் சார்ந்த விஷயம். அவர்கள் ஃபிட்டாக இருந்து, சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.”
“சிவப்பு பந்தில் இவர்கள் இருவரும், மற்றவர்கள் கேட்பதை விட நீண்ட காலம் விளையாட வேண்டும். குறைந்த ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என எவ்வித போட்டிகளிலும் அனுபவம் மிகவும் அவசியம். அனுபவ வீரர்கள் இளம் தலைமுறையின் திறமையை வெளிக்கொண்டு வர அணியில் இருப்பது அவசியம் ஆகும்.”
“தேர்வுக்குழு யாரேனும் சரியாக விளையாடவில்லை எனில், அவர்களை அணியில் இருந்து நீக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் மூத்த வீரர்களாக இருந்தாலும் சரி, வளர்ந்துவரும் வீரர்களாக இருந்தாலும் சரி. ஒருவர் ஃபிட்டாக இருக்கும் வரை அவரை அணியில் சேர்க்க வேண்டும். எனினும், வயதை கடந்து அணிக்கு எந்த வகையிலும் பங்களிப்பை வழங்கவில்லை எனில், அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…