உசுரே நீதானே- மகனுக்கு ஹர்திக் வாழ்த்து

0
75

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியா பிறந்த நாளை ஒட்டி இன்ஸ்டா பதிவு வெளியிட்டார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா இலங்கையில் உள்ளார். மகன் பிறந்தநாளில் வேரொரு தேசத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, தனது வாழ்த்துக்களை உருக வைக்கும் பதிவாக தெரிவித்தார்.

இது தொடர்பான பதிவில் அவர், உன்னால் தான் ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன். எனது பார்ட்னர் இன் கிரைம், என் இதயமே, அகு உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வார்த்தைகளை கடந்து காதலிக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் வீடியோ ஒன்றையும் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார்.

அகஸ்தியா தற்போது தனது தாய் நடாஷா ஸ்டான்கோவிக் உடன் செர்பியாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தது. பிரிவது தொடர்பாக இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிட்டனர். அதில், நான்கு ஆண்டுகள் ஒன்றாக கழித்த பிறகு நடாஷாவும் நானாவும் பிரிவது என முடிவு எடுத்துள்ளோம்.

எல்லாவற்றையும் கடந்து ஒன்றாக இருக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இந்த முடிவு எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று என ஹர்திக் பாண்டியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. உலகக் கோப்பையை வென்றும்கூட மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியாக காணப்படவில்லை.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here