ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு போட்டிகளிலும் அவர் சுமாரான ஒரு ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக ஒரு போட்டியில் 6 ரன்களும் மற்றோரு போட்டியில் இன்னும் குறைந்த ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அணியில் பல வீரர்கள் சதம், அரைசதம் என விளாசினார்கள்.
ஆனால், ஐபிஎல் சீசனில் நன்றாக பார்மில் இருந்த சுப்மன் கில் டெஸ்ட் தொடரில் சரியாக செயல்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுப்மன் கில் பார்ம் குறித்து பல விரர்களும் பேசி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றியம் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் “இந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய பல வீரர்களுக்கு நான் 10-ல் 5 மார்க்ககளுக்கு மேல் கொடுப்பேன்.
ஆனால் சுமாராக விளையாடிய சுப்மன் கில்லுக்கு 10 மார்கிற்கு 4 மார்க் மட்டுமே கொடுப்பேன். அவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி அவரை 3-ஆவது ஆளாக களம் இறக்கியது. ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஓபனிங் ஜோடி நன்றாக விளையாடினால் மட்டுமே கண்களை குவிக்க முடியும். அதைப்போல தான் மூன்றாவது இரங்கும் வீரர்களும் அந்த ஓப்பனிங்கில் கொடுத்த ரன்களை தக்க வைத்து சிறிது நேரம் ஆட்டத்தில் நின்று ரன்களை குவிக்கவேண்டும்.
ஆனால் அதை சுப்மன் கில் சரியாக செய்யவில்லை இதற்கு பிறகும் சுப்மன் கில்லுக்கு 3-ஆவதாக இறங்க வாய்ப்பு கிடைத்தது என்றால் அந்த இடத்திற்கு தகுந்தவாறு விளையாடி கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ரோஹித் ஷர்மா ஜெயஸ்வால் இருவரும் இரண்டு போட்டிகளிலும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதற்குப் பிறகு களமிறங்கிய சுப்மன் கில் அவர்களுக்கு உதவவே இல்லை.
அந்த மாதிரி சமயத்தில் நீங்களும் கை கொடுத்தால் இந்திய அணிக்கு இன்னும் பக்க பலமாக இருக்கும். எனவே வரும் போட்டிகளில் நீங்கள் இன்னும் திறம்பட செயல்பட வேண்டும்” என ஜாகீர் கான் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சூப்பராக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் மிகவும் மோசமாக விளையாடி உள்ள காரணத்தினால் அடுத்ததாக மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று சூழ்நிலையில் இருக்கிறார் . மீண்டும் பழையபடி அதிரடியாக எப்போது விளையாடி கம்பேக் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…