சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தலைவராக தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு கிரெக் பார்க்லேவை விட அதிக வாய்ப்புகள் கொண்டவராக ஜெய் ஷா விளங்குவதாக கூறப்படுகிறது. ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே துவங்கிவிட்டன.
இதை உறுதிப்படுத்துவதற்கு ஐசிசி விதிகளின் படி ஒருவர் முன்மொழிவதும் மற்றொருவர் அதை வழிமொழிவதும் அவசியம் ஆகும். இந்த விஷயத்தில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்படுவதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆதரவு வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கும் பட்சத்தில் பிசிசிஐ-இன் அடுத்த செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் ரோகன் ஜெட்லி பிசிசிஐ-இன் செயலாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ரோகன் ஜெட்லியுடன் மேலும் சிலர் போட்டியிடுவதாகவும், ஆனால் இவர்தான் அந்த போட்டியில் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசி விதிகளின் படி தற்போதுள்ள 16 ஐசிசி இயக்குநர்களும் தங்களது வேட்பு மனுக்களை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதில் மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் அந்த பதவியை தொடர்வதற்கு கிரெக் பார்க்லேவுக்கு தகுதி உண்டு. ஆனால் அவர், மீண்டும் தலைவராக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
ஒருவேளை தற்போதைய தகவல்கள் உண்மையாகும் வகையில், ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இளம் வயதில் ஐசிசி தலைவர் ஆனவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெறுவார். அவருக்கு தற்போது 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன் மற்றும் சஷான்க் மனோகர் ஆகியோர் வரிசையில், ஐசிசி தலைவர் ஆன இந்தியர் என்ற பெருமையையும் ஜெய் ஷா பெறுவார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…