Categories: Cricket

டோனி வெயிட்டு தான்.. ஆனா எப்பவும் அதையே சொல்ல முடியாது – இந்திய அம்பயர் பளீச்

சர்வதேச கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி பயங்கரமான மூளைக்காரர் என்று அனைவருக்கும் தெரியும். போட்டிகளின் போது அசாத்திய முடிவுகள் எடுப்பது, மிக கச்சிதமாக ஃபீல்டிங் வைப்பது என எம்எஸ் டோனி அனைத்திலும் சிறந்து விளங்கினார். எம்எஸ் டோனி எல்லா முறையும் சரியான முடிவுகளை எடுத்தார் என்று கூறிவிட முடியாது என இந்திய அம்பயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

களத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் டிஆர்எஸ் விதியை சரியாக பயன்படுத்தக்கூடியவராக எம்எஸ் டோனி அறியப்படுகிறார். டிஆர்எஸ் முடிவுகள் எம்எஸ் டோனிக்கு பலமறை வெற்றிகரமாக அமைந்து இருக்கிறது. இதனாலேயே டோனி ரசிகர்கள் டிஆர்எஸ்-ஐ டோனி ரிவ்யூ சிஸ்டம் என்றும் குறிப்பிட்டு வந்தனர்.

எம்எஸ் டோனி டிஆர்எஸ்-ஐ எடுக்கிறார் எனில், அம்பயர் தனது முடிவை மாற்றுவர். இந்த நிலையில், முன்னாள் அம்பயரான அனில் சவுத்ரி எம்எஸ் டோனி டிஆர்எஸ் எடுப்பது பற்றி கூறியுள்ளார்.

“எல்லா சமயமும், டோனி சரியாக இருந்தார் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் டிஆர்எஸ்-இல் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். போட்டி குறித்து அவரிடம் நிறைய யுத்திகள் உள்ளன. துவக்கத்தில் இருந்ததை விட ரிஷப் பண்ட் தற்போது அதிகளவு முன்னேறியுள்ளார். இது அனுபவம் சார்ந்தது, ரீபிளேக்களை அதிகளவு பார்த்து, முடிவுகளை பரிசீலனை செய்ய வேண்டும்.”

“விக்கெட் கீப்பர்கள் பந்தை சரியாக பார்ப்பதற்கு ஏற்ற இடத்தில் இருப்பார்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருந்து அசையாமல் பந்து எப்படி வருகிறது என்பதை பார்ப்பார்கள். சமயங்களில் அம்பயர்கள் விக்கெட் கீப்பர் அசைவுகளை பார்த்தும் முடிவுகளை எடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் விக்கெட் கீப்பர்கள் தொடர்ச்சியாக பந்தின் மீது பார்வையை வைத்திருப்பார்கள் என்பது தான்.”

“எம்எஸ் டோனி எப்பவும் உண்மை முடிவுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். பல சமயங்களில் அவர் மற்றவர்களை அப்பீல் கேட்க வேண்டாம் என்று தடுத்துள்ளார். களத்தில் ஏழு மணி நேரம் வரை இருப்பார் எனில் அவர் சிறந்த அம்பயராக உருவாகலாம்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago