Connect with us

Cricket

தலைமை பயிற்சியாளர் இருக்கட்டும்… பந்துவீச்சு பயிற்சியாளர் யார் தெரியுமா? வெளியான புது தகவல்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் நேற்று நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதோடு, கவுதம் கம்பீர் மட்டுமின்றி தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழருமான டபிள்யூ.வி. ராமனும் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. நேற்று முதற்கட்ட நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்றும் நேர்காணலின் அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியன் பந்துவீச்சு பயிற்சியாளர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது அசீஷ் நெஹ்ரா ஆகியோர்களில் ஒருவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பி.சி.சி.ஐ. மற்றும் கவுதம் கம்பீரிடம் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கம்ரான் அக்மல், “கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டது, பிறகு அவர் ஆலோசகராக பணியாற்றிய கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.”

“அவர் தலைசிறந்த வீரர், அவரிடம் புத்திசாலித்தனமான கிரிக்கெட் மூளை உள்ளது. அவருடன் நிறைய முறை விளையாடி இருக்கிறேன். நாங்கள் இருவரும் நீண்டநேரம் ஒன்றாக செலவிட்டு இருக்கிறோம். ஒன்றாக விளையாடி, உணவு சாப்பிட்டு, ஆரோக்கியமான உரையாடல்களை கடந்து வந்துள்ளோம். இன்றும் நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். என்னை பொருத்தவரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகவும், அசிஷ் நெஹ்ரா அல்லது ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம்,” என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

ஒரே ஓவரில் 43 ரன்களை வழங்கிய இங்கிலாந்து பவுலர்

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன். சமீபத்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் ஓல்லி ராபின்சன் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். சசெக்ஸ் அணிக்காக களமிறங்கிய ஓல்லி ராபின்சன் லெய்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 2-வது டிவிஷன் போட்டியில் வீசிய ஓவர் அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இவர் வீசிய முதல் பந்தை லூயிஸ் கிம்பர் என்ற வீரர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்து நோ பால் ஆனது. இதையும் விட்டுவைக்காத லூயிஸ் அதனையும் சிக்சராக மாற்றினார். அடுத்த மூன்று பந்துகளில் லூயிஸ் 4,6,4 என பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதில் 5-வது பந்தும் நோ பால் ஆக அமைந்தது. அடுத்த பந்து சரியாக வீசிய போதும், அது பவுண்டரியை கடந்தது.

அடுத்து வீசிய பந்து மீண்டும் நோ பால் ஆக அமைந்தது. அதையும் லூயிஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். இறுதியில் அந்த ஓவரின் கடைசி பந்தை சரியாக வீசிய ஓல்லி ராபின்சன் அதில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். எனினும், இந்த ஓவரில் மட்டும் 6,6,4,6,4,6,4,6,1 என மொத்தம் 43 ரன்கள் அடிக்கப்பட்டன.

ஓவருக்கு ஆறு பந்துகள் வீசப்படும் நிலையில், அனைத்தையும் சிக்சராக அடித்தால் கூட 36 ரன்களை மட்டுமே அடிக்க முடியும். அந்த வகையில், ஓவரில் எக்ஸ்டிராஸ் வீசுவது, அதனை பேட்டர் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் போது ஓவரில் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பது தான் இந்த போட்டியில் அரங்கேறி இருக்கிறது.

முன்னதாக 1989-90-க்களில் நடைபெற்ற வெலிங்டன் மற்றும் கேண்டர்பரி அணிகள் இடையிலான போட்டி ஒன்றில் ராபெர்ட் வேன்ஸ் என்ற பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு 77 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதுவே தற்போது கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஓல்லி ராபின்சன் அந்த அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

google news
Continue Reading

Cricket

சர்வதேச டி20 பேட்ஸ்மென் – முதலிடத்தை இழந்த சூர்யகுமார் யாதவ்

Published

on

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி பேட்டர் என்ற பெருமையை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இழந்துள்ளார். தற்போது உலகின் முன்னணி டி20 பேட்டராக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் முன்னேறி அசத்தினார். கடந்த ஆண்டு டிசம்பர் 2023 முதல் உலகின் முன்னணி டி20 பேட்டர் ஆக இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 255 ரன்களை குவித்தார். இதில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்த 76 ரன்களும் அடங்கும். இவர் தற்போது 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. முன்னணி டி20 பேட்டர்கள் பட்டியலில் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் வரிசையில், பில் சால்ட், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 44 இடங்கள் முன்னேறி முன்னணி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 24 ஆவது இடத்தில் உள்ளார். இவரின் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தில் உள்ளார். ஸ்பின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் 8-ஆவது இடத்தில் உள்ளார். இவர் தற்போது இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கிறார்.

google news
Continue Reading

Cricket

ராஞ்சிக்கு Economy Class-ல் பயணித்த எம்.எஸ். டோனி – வீடியோ வைரல்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தறபோது ஐ.பி.எல். தொடரில் மட்டும் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல்-இல் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் களமிறங்குவாரா என்ற விஷயம் கேள்விக்குறியாகவே உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் எம்.எஸ். டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் பரவலாக வெளியாகி வந்தது. மேலும், அவருக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. எனினும், சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழையாத காரணத்தால், எம்.எஸ். டோனி ஓய்வு பற்றிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லாமலேயே இருக்கிறது.

2024-இல் சி.எஸ்.கே.-வின் கோப்பை கனவு பலிக்காததை அடுத்து, எம்.எஸ். டோனி தனது அடுத்த வேலைகளை பார்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ராஞ்சியில் தனக்கு பிடித்த வாகனங்களில் வலம்வந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

அந்த வரிசையில், தற்போது எம்.எஸ். டோனி ராஞ்சி செல்வதற்கான விமானத்தில் எகனாமி கிளாஸ் எனப்படும் குறைந்த விலை டிக்கெட் கொண்ட பிரிவில் பயணம் செய்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் வீடியோக்களின் படி எம்.எஸ். டோனி விமானத்தில் தனது பைகளை இருக்கையின் மேல் இருந்த கபோர்டில் வைத்துவிட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ பகிரும் நெட்டிசன்கள் எம்.எஸ். டோனி மிகவும் எளிமையானவர் என்று பாராட்டு தெரிவிக்கின்றனர்.

google news
Continue Reading

Cricket

T20 World Cup: அடுத்த ரிவெஞ்சுக்கு தயாராகும் இந்தியா! #INDVsENG

Published

on

By

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்க அணியும், பெரும் எழுச்சி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இது டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

அதேபோல், கயானா புராவிடன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்க்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி பழிவாங்கியது.

இந்தநிலையில், 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்த அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

அடிலெய்டு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்தியா நிர்ணயித்த இந்த இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுலின் முதல் அரசியலமைப்புப் பதவி.. எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் முக்கியத்துவம்!

google news
Continue Reading

Cricket

சர்வதேச கிரிக்கெட்டுக்கு “குட்பை” சொன்ன டேவிட் வார்னர்

Published

on

உலகளவில் அதிரடியான பேட்டர்களில் ஒருவரான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியதை அடுத்து டேவிட் வார்னர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

முன்னதாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் தான் கடைசியாக ஆஸ்திரேலிய ஜெர்சியை அணிவேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்து இருந்தார். எனினும், இவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்காக டேவிட் வார்னர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 43 பந்துகளில் 89 ரன்களை விளாசியதே அவரின் தலைசிறந்த இன்னிங்ஸ்-ஆக பார்க்கப்படுகிறது. 110 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 3277 ரன்களை குவித்திருக்கிறார்.

google news
Continue Reading

Trending