Categories: Cricket

ஐசிசி தலைவராக ஜெய் ஷா.. பாகிஸ்தான் எடுத்த நிலைப்பாடு இதுதான்..!

பிசிசிஐ தலைவராக இருக்கும் ஜெய் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான ஐசிசி கூட்டத்தில் என்ன நடந்தது? எத்தனை பேர் ஜெய் ஷா தலைவராக வாக்களித்தனர் என்ற விவரங்கள் மர்மமாகவே இருந்தது.

தற்போது தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், ஐசிசி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 16 உறுப்பினர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இவர்களில் ஜெய் ஷாவிற்கு 15 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டும், எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அமைதி காக்க முடிவு செய்தது.

“பாகிஸ்தான் எந்த தகவலும் வழங்கவில்லை. மேலும், ஜெய் ஷாவிற்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்த நிலையில் அவர்களின் முடிவு தேவைப்படவில்லை. இதுதொடர்பான ஒட்டுமொத்த வழிமுறைகளின் போதும் பாகிஸ்தான் வாரியம் அமைதி காப்பதில் உறுதி கொண்டிருந்தது,” என்று கூறப்படுகிறது.

ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய ஜெய் ஷா, “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதை தாழ்மையுடன் ஏற்கிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகறிய செய்வதற்கு ஐசிசி குழு மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன்.”

“கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான வடிவங்களை சம அளவு முக்கியத்துவம் கொடுத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு எங்களது பிரபல போட்டி தொடர்களை மேலும் பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யும் முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். கிரிக்கெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலமாக்குவதே எங்களது இலக்கு,” என்று தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அமைப்புகள் மற்றும் தலைவர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஜெய் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

42 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago