Categories: Cricket

போட்டியின்றி தேர்வு.. இளம் வயது ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி கவுன்சில் தலைவராக ஜெய் ஷா செயல்பட இருக்கிறார். முன்னதாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கிரெக் பாக்லே தெரிவித்து இருந்தார்.

ஐசிசி தலைவர் போட்டியில் இருந்து கிரெக் விலகிய நிலையில், ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெய் ஷா, சர்வதேச அளவில் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்துவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

“சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதை தாழ்மையுடன் ஏற்கிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகறிய செய்வதற்கு ஐசிசி குழு மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன்.”

“கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான வடிவங்களை சம அளவு முக்கியத்துவம் கொடுத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு எங்களது பிரபல போட்டி தொடர்களை மேலும் பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யும் முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். கிரிக்கெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலமாக்குவதே எங்களது இலக்கு.”

“இதுவரை கற்ற மதிப்புமிக்க பாடங்களை கொண்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதோடு, புதுவகை எண்ணங்களுக்கு வழிகொடுத்து, உலகளவில் கிரிக்கெட் மீதான காதலை பன்மடங்கு அதிகப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அந்த வகையில் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது கிரிக்கெட் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்,” என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

42 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago