இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், தனது கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதை உறுதிப்படுத்தினார்.
இதே வெற்றியோடு, தலைமை பயிற்சியாளராக பதிவேயற்றுள்ள கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பியுள்ளார். ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெற்றி வாகை சூடியிருந்தது. வெற்றிகர இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள கவுதம் கம்பீர் முன்னதாக இந்திய அணியில் விளையாடிய காலக்கட்டத்தில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளுக்கும் தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், பிசிசிஐ தனது பாரம்பரிய முறைப்படி மூன்றுவித போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ஒரே தலைமை பயிற்சியாளரை நியமிப்பது என முடிவு செய்து, கவுதம் கம்பீரை தேர்வு செய்து அறிவித்தது.
இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “நாங்கள் நியமிக்க போகும் பயிற்சியாளர் என்ன சொல்கிறார்கள் என்று நாங்கள் கேட்க வேண்டும். அப்படி கவுதம் கம்பீரை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம்.”
“அவர் மூன்று வித அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட விரும்பும் போது, நான் எப்படி குறிப்பிட்ட போட்டிக்கான அணியை மட்டும் வழிநடத்தினால் போதும் என்று அவரிடம் கூற முடியும்? கிட்டத்தட்ட 70 சதவீதம் வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்.”
“தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து பயிற்சியாளர்கள் உள்ளனர். ராகுல் டிராவிட்-க்கு ஓய்வு எடுக்கும் போதெல்லாம், விவிஎஸ் லக்ஷமன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு வந்தார்” என்றார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…