Categories: Cricket

பதவியை ஏற்றால்.. அவருக்கும், அணிக்கும் வாழ்த்துகள் – கபில் தேவ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுள்ள கவுதம் காம்பீர், அடுத்த வாரம் துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பணியை துவங்க உள்ளார்.

ராகுல் டிராவிட் போன்று பயிற்சியாளர் பதவியில் கவுதம் காம்பீர் அனுபவம் மிக்கவர் இல்லை. மாறாக இவர் ஆலோசகர் பணியில் அனுபவம் மிக்கவர். உலகளவில் பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் மூன்று ஆண்டுகள் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். கவுதம் காம்பீர் இரண்டு ஆண்டுகள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார்.

இவர் வழிகாட்டுதலில் அந்த அணி ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2023 தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஆலோசகராக பணியாற்றிய கவுதம் காம்பீர், அந்த அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். ஆலோசகர் பணியில் கவுதம் காம்பீர் சிறந்து விளங்கிய நிலையில், அவர் தலைமை பயிற்சியாளார் பதவிக்கு ஏற்றவர்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் “ஒருவேளை கவுதம் காம்பீர் இந்த பதவியை (இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்) ஏற்றால், அவர் மற்றும் அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஏற்கனவே செய்ததைவிட அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்திய வீரர்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Web Desk

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago