ஆல்-ரவுண்டர் கிரிஷ்ணப்பா கவுதம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கவுதம் கம்பீர் உடன் இரண்டு ஆண்டுகள் பயணம் செய்துள்ளார். தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியில் இணைவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது வழிகாட்டுதலில் லக்னோ அணி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தகுதி சுற்று வரை முன்னேறியது.
கவுதம் கம்பீர் உடனான பயணம் குறித்து கிரிஷ்ணப்பா கவுதம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது கவுதம் கம்பீர் எதையும் மறைக்க மாட்டார், அவர் உண்மையை ஒருவரின் முகத்தில் வெளிப்படையாக கூறும் குணம் கொண்டவர். மேலும், வீரர்களின் முழு திறமையை வெளிக் கொண்டு வரும் திறன் கொண்டவர் கவுதம் கம்பீர் என்றார்.
“கவுதம் கம்பீர் பாய் மிகவும் வெளிப்படையானவர். அவர் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே சொல்லக்கூடியவர். அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளுக்கு எப்படி தயார் ஆக வேண்டும் என்று அவர் கூறுவார். வீரர்களின் முழு திறமையை எப்படி வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். ஒரு வீரரிடம் அவர் பேசும் விதம், அவர் ஊக்கமூட்டும் விதம், இது வித்தியாசமான போட்டி ஆகும்.”
“ஒவ்வொருத்தரும் சவுகரியமாக இருப்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்வார். சரியான விஷயம் சரியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்வார். இதே போன்று தவறானவற்றை தவறு என்று எடுத்துக் கொள்வார். அவர் எதையும் மூடி மறைக்க நினைக்க மாட்டார். உங்கள் முகத்திற்கு நேராகவே உண்மையை அப்பட்டமாக போட்டு உடைத்திடுவார்,” என்று கிரிஷ்ணப்பா கவுதம் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…