வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதத்தை விளாசி அனைவரையும் அதிர வைத்தார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 500 வது போட்டியில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் சதம் அடித்தது இல்லை. ஆனால், விராட் கோலி நேற்று தனது 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டிய விளையாடி அந்த போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இந்நிலையில் விராட் கோலி நல்ல கிரிக்கெட் வீரர் தான் அவர் எப்போதும் சச்சினுக்கு பிறகு தான் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ‘அவர் விராட் கோலி என்னை பொருத்தவரை எப்போதுமே ஒரு நல்ல வீரர் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . ஆனால், அவரை எப்போதுமே சச்சினுக்கு பிறகு தான் கூற வேண்டும்.
நான் பார்த்த வியந்த ஒரு வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான் அவருக்கு பிறகுதான் விராட் கோலி. எனவே சச்சினுக்கு பிறகுதான் நாம் அனைவரும் விராட் கோலியை கூற வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை இவர்கள் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை பிரைன் லாரா , விவயன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் அருமையான ஆட்டக்காரர்கள் அவர்கள் எப்போதும் டாப்பில் இருப்பார்கள். அதேபோல ரிக்கி பாண்டிங் வீரர்களும் அற்புதமாக விளையாடக்கூடிய திறமைக்காரர்கள் அவர்களுடைய வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வீரர்கள் அனைவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக அவுட் ஆகக் கூடாது என்ற மனநிலையில் விளையாடுவார்கள். நான் அப்படிதான் நினைக்கிறேன் . அவரும் ஒரு நல்ல வீரர் விராட் கோலிக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிரிக்கெட் மீது அதிகமான காதல் உள்ளது. கிரிக்கெட்காக என்ன வேணாலும் செய்யலாம் என்ற மனநிலை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
என்னிடம் சில நாட்கள் அறிவுரையும் கேட்டிருக்கிறார. என்னிடம் மட்டும் இல்லை. பல பெரிய பெரிய ஜாம்பவான்களிடம் பல அறிவுரைகளை கேட்டுள்ளார். அவர் கேப்டனாக இருந்த போதும் அவருடைய கேப்டன்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனவும் விராட் கோலி பற்றி கோர்ட்னி வால்ஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…