இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கி தினம் தினம் ஒரு போட்டி எனும் வகையில் ஐபிஎல் போலேவே விறு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர் மற்றும் தம்புலா ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதியது.
இந்த நிலையில் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் மைதானத்திற்குள் திடீரென பெரிய பாம்பு ஒன்று எப்படியோ நுழைந்தது, நுழைந்த அந்த பாம்பு மைதானத்தை சுத்தி சுத்தி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்க அதனைப் பார்த்த ஷகிப் அல் ஹசன் சற்று சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டு இருந்தார்.
பிறகு அங்கிருந்த நடுவர்கள் மற்றும் அணியின் வீரர்கள் ஷகிப் அல் ஹசனிடம் பந்து வீச கூறினார்கள். பிறகு ஷகிப் அல் ஹசன் அங்கு பாம்பு இருப்பதாக செய்கையை காட்டினார். பிறகு அந்த பாம்பு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வெளியே சென்று விட்டது.
இருப்பினும் திடீரென பாம்பு மைதானத்திற்குள் நுழைந்த காரணத்தினால் அங்கு பரபரப்பான சூழ்நிலைவியது. பிறகு பாம்பு வெளியே சென்றவுடன் போட்டி மீண்டும் நடைபெற்றது இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் தமிழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவை நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த ஆடியோக்களை வைத்து எடிட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கால்லே கிளாடியேட்டர் அணி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 180/5 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தம்புலா அணியும் 20 கால்லே கிளாடியேட்டர் அணியை போலவே ஓவர்களில் 180 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…