இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் துவங்கும் முன் பேட்டியளித்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா எம்.எஸ். தோனி பற்றி பேசியுள்ளார். இலங்கை அணியின் பந்துவீச்சாளரான மகேஷ் தீக்ஷனா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி உள்ளார்.
“நான் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக என்னை எதிர்த்து ஸ்வீப் ஷாட் ஆடும் பேட்டர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். எனது செய்கை மூலம், என்னால் அதிவேகமாக பந்துவீச முடியும்.”
“ஆனாலும், அவர்கள் அதை பவுண்டரிக்கு விரட்டிடுவர். அவர் என்னை ஃபுல் லென்த் அளவுக்கு வீச கோருவார். அப்படித் தான் நான் யார்க்கர் வீச ஆரம்பித்தேன். நாளடைவில் டெத் ஓவர்களில் பந்துவீச அதிக நம்பிக்கை கிடைத்தது. தோனியிடம் எப்போதும் திட்டம் இருக்கும். ஆனால் அவர் பந்துவீச்சாளர் திட்டத்தை முதலில் முன்னெடுப்பார். அதற்கு பலன் கிடைக்கவில்லை எனில், அவர் உங்களுக்கு உதவுவார்.”
“டி20 கிரிக்கெட்டில் டிபென்சிவ் பவுலிங் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஃபிளாட் விக்கெட்டில் 4 ஓவர்களில் 20-30 ரன்களை கொடுப்பது பிரச்சினை இல்லை. அணியில் 3-4 விக்கெட்டுகளை எடுக்க மற்ற பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள்,” என்று மகேஷ் தீக்ஷனா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…