சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியா ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த இருக்கிறது. இந்த போட்டி 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
முன்னதாக 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன் பிறகு 1977 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் 100 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 45 ரன்களில் வெற்றி பெற்றது.
2024-25 முதல் 2030-31 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் இதர போட்டிகளுக்கான உரிமத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதி செய்துவிட்டது. கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் அரசு அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க ஏதுவாக இந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
“2027 மார்ச் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150-வது ஆண்டு விழாவுக்கான டெஸ்ட் போட்டி மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இந்த சூழலில் இங்கிலாந்து அணியை வரவேற்க எங்களால் காத்திருக்க முடியவில்லை. நீண்ட கால உரிமைகளை உறுதி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அடுத்த ஏழு ஆண்டுகளில் சில அருமையான பகுதிகளில் சிறப்பான கிரிக்கெட் நடைபெற இருப்பதை உறுதி செய்கிறது,” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லெ தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…