துலீப் கோப்பை தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் இடையிலான போட்டியில் ஆகாஷ் தீப் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். சமீபத்தில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆகாஷ் தீப் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம், இவர் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டியை அவுட் செய்த விதம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது “நிதிஷ் ரெட்டிக்கு முதல் இன்னிங்ஸிலும், வாஷிங்டன் சுந்தருக்கு இரண்டாவது இன்னிங்ஸிலும் நான் பந்துவீசினேன். நெட்ஸில் வாஷிங்டன் சுந்தருக்கு நான் அதிகளவில் பந்துவீசி இருக்கிறேன். நான் எப்படி பந்துவீசுவேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால், அவரிடம் நான் அதுவரை வீசாத வகையில் பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன்.”
“இடதுகை பேட்டருக்கு அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து பந்துவீசும் போது, பந்து தானாகவே ஷைன் உள்ள பகுதியில் நகரும். இது குறித்து நான் ஷமியிடம் பேசினேன், அப்போது பந்தை எப்படி திருப்ப வேண்டும் என்று கேட்டேன். அவர் அதை செய்து நான் பார்த்திருக்கிறேன். அவர் என்னிடம் பந்தை திருப்புவது பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டாம். பந்து தானாக திரும்பும் என்றார்.”
“ஒரே மாதிரி செல்லும் போது, பந்து தானாக ஷைன் உள்ள பக்கமாக திரும்பும், இது பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் அதிக முயற்சை தேவை என்று அவர் என்னை எச்சரித்தார். பந்துவீச்சாளராக அதை செய்ய முடியும் எனில், பேட்டர்கள் பந்தை துரத்த முயற்சிப்பார்கள்,” என்று ஆகாஷ் தீப் தெரிவித்தார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…