Categories: Cricket

2019 உலகக் கோப்பை: மனம் திறந்த எம்.எஸ். டோனி, என்ன சொன்னார் தெரியுமா?

2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக எம்.எஸ். டோனி ரசிகர்கள் இந்த போட்டியை எப்பதும் மறக்கவே மாட்டார்கள்.

அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து, இக்கட்டான சூழலில் எம்.எஸ். டோனி ரன் அவுட் ஆகி வெளியேறியது இன்றும் பலருக்கும் மன கசப்பை கொடுக்கும். இந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ். டோனி, அந்த இன்னிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதில், என்னுடைய கடைசி உலகக் கோப்பை தொடர் என்று எனக்கு தெரியும் என்பதால், வெற்றியுடன் முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்காதது மனதை உடைத்துவிட்டது. அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகர முயற்சித்தோம். இதற்கு நேரம் எடுக்கும்.

உலகக் கோப்பைக்கு பிறகு எல்லோருக்கும் சற்று நேரம் கிடைக்கும். நான் அந்த தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை, இதனால் எனக்கு அதிக நேரம் கிடைத்தது. உண்மையில் அது மனதை உடைத்த தருணங்கள் தான். ஆனால் அதேநேரம் அதில் இருந்து மீண்டு வர வேண்டும். முழு முயற்சியை கொடுத்தீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் நம்ப வேண்டும், என்றார்.

Web Desk

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

8 hours ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

8 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

9 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

17 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

18 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

18 hours ago