Categories: Cricket

அவர் வேற லெவல்-ங்க.. டோனியுடன் முதல் சந்திப்பு குறித்து பாருபள்ளி காஷ்யப்

இந்திய பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப், எம்எஸ் டோனியை முதல்முறை சந்தித்த அனுபவம் பற்றி தெரிவித்த தகவல்கள் தற்போது சமூக வலதைளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனது அசாத்திய கிரிக்கெட் சாதனைகள் மட்டுமின்றி, ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திற்கென எம்எஸ் டோனியை பின்தொடர்வோர் ஏராளம் எனலாம். அந்த வகையில், பிரபல பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் எம்எஸ் டோனியை முதல் முறையாக சந்தித்த போது இருவரின் உரையாடல் பற்றி பாட்காஸ்ட் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது கூறிய பாருபள்ளி காஷ்யப், “சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைத்து எம்எஸ் டோனியை சந்தித்தேன். அப்போது அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நான் பாருபள்ளி காஷ்யப் சாய்னா நேவாலின் கணவர் என்று கூறினேன்.”

“அதற்கு எம்எஸ் டோனி, உங்களை எனக்கு நன்றாகவே தெரியும். நானும் பேட்மிண்டேன் விளையாடுகிறேன். உங்களது மனைவி பெயரை வைத்து அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.”

“இதைத்தொடர்ந்து அவர் என்னிடம் தோழன் மற்றும் சக வீரரை போன்று பேசினார். இருவர் இடையே நீண்ட கால நட்பு இருப்பதை போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தினார்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்எஸ் டோனி மூன்று ஐசிசி கோப்பைகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐந்துமுறை ஐபிஎல் கோப்பைகளையும் வென்று குவித்துள்ளார்.

Web Desk

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago