இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தறபோது ஐ.பி.எல். தொடரில் மட்டும் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல்-இல் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் களமிறங்குவாரா என்ற விஷயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் எம்.எஸ். டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் பரவலாக வெளியாகி வந்தது. மேலும், அவருக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. எனினும், சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழையாத காரணத்தால், எம்.எஸ். டோனி ஓய்வு பற்றிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லாமலேயே இருக்கிறது.
2024-இல் சி.எஸ்.கே.-வின் கோப்பை கனவு பலிக்காததை அடுத்து, எம்.எஸ். டோனி தனது அடுத்த வேலைகளை பார்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ராஞ்சியில் தனக்கு பிடித்த வாகனங்களில் வலம்வந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
அந்த வரிசையில், தற்போது எம்.எஸ். டோனி ராஞ்சி செல்வதற்கான விமானத்தில் எகனாமி கிளாஸ் எனப்படும் குறைந்த விலை டிக்கெட் கொண்ட பிரிவில் பயணம் செய்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரல் வீடியோக்களின் படி எம்.எஸ். டோனி விமானத்தில் தனது பைகளை இருக்கையின் மேல் இருந்த கபோர்டில் வைத்துவிட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ பகிரும் நெட்டிசன்கள் எம்.எஸ். டோனி மிகவும் எளிமையானவர் என்று பாராட்டு தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…
இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…