Categories: Cricket

என்னோட சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது… மார்தட்டும் முரளிதரன்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன், இன்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஆஃப்-ஸ்பின்னரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், தனது 800 விக்கெட் சாதனை தற்போதைக்கு யாரும் முறியடிப்பார்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார். சமீபத்திய கிரிக்கெட் வீரர்கள் குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் விளையாடவே விரும்புகின்றனர். இதன் காரணமாக தற்போதைய இளம் வீரர்கள் யாரும் தனது சாதனையை நெருங்குவது சந்தேகம் தான் என்றார்.

“டெஸ்ட் கிரிக்கெட் பற்றி உண்மையில் கவலையாகவே உள்ளது. ஒவ்வொரு நாடும் கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். ஆனால், மற்ற நாடுகளில், பலரும் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பது இல்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் குறைவாகவே இருக்கும்.”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினம். தற்போதைய சூழல் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டது. மேலும், நாங்கள் 20 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடினோம். தற்போது ஒரு வீரர் கிரிக்கெட் விளையாடும் காலக்கட்டும் மிகவும் குறைந்துவிட்டது.”

“நிலைத்தன்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளனர் என்பது பிரச்சினையே இல்லை, அனைவரும் திறமை மிக்கவர்கள். ஆனால், அவர்கள் எப்படி அனுபவம் பெறுகிறார்கள்? சமீப காலங்களில், இது மிகவும் கடினம். அவர்கள் மனங்களில் ஏராளமான தொடர்கள் உள்ளன,” என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago