இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி விமர்சனங்களுக்கு சரியான ஒரு பதிலடி கொடுத்திருந்தார். அவர் அடித்த 83 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.
போட்டியில் அதிகமான ரன்கள் குறித்த காரணத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ் ” நான் பவர் பிளே ஓவர்களிலே களமிறங்கி விட்டேன் எனவே அந்த ஓவர்களில் நன்றாக ரன்கள் குவித்தால்தான் வெற்றி பெற சற்று எளிதாக இருக்கும். அதனை மனதில் வைத்து தான் இந்த போட்டியில் நான் விளையாடினேன் என்னை பொறுத்தவரை நான் நன்றாக விளையாடி உள்ளதாக நினைக்கிறேன். வலைப் பயிற்சியில் நன்றாக பொறுமையாக விளையாட வேண்டும் என்று பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தேன்.
எந்த அளவிற்கு கடினமாக பயிற்சி செய்தனோ அதற்கு எனக்கு இன்று பலன் கிடைத்து விட்டது. நானும் திலக் வருமாவும் இணைந்து இந்த போட்டியில் அருமையாக விளையாடினோம் அவருடன் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் பலமுறை விளையாடி இருக்கிறேன். எனவே நாங்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் செய்து நன்றாக விளையாடினோம் இதே போலவே வரும் போட்டிகளில் அருமையாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்போம்’ என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டி செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் அடித்திருந்தது அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…