கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரை இந்தியாவில் என்றைக்கும் குறையாத மோகம் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி எந்த அணியுடன் மோதினாலும் தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு போட்டியை பார்க்க நேரம் ஒதுக்கி விளையாட்டை கண்டு மகிழும் பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்திய அணி எதிர்த்து விளையாடுவது ஜாம்பவான் அணியாக இருந்தாலும் சரி, கத்துக் குட்டி அணியாக இருந்தாலும் சரி அந்த போட்டியை காண கூட்டம் குவியும்.
அதே போன்ற ஆர்வமும், ஈடுபாடும் தான் உள்ளூர் போட்டியான ஐபில் தொடரின் மீதும் இருந்து வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்து விட்டாலே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும்.
ஒவ்வொரு அணியை ஆதரித்து அவர்களை உற்சாகபடுத்த எந்த மாநில மைதானத்தில் போட்டி நடைபெற்றாலும் அங்கே சென்று போட்டியயை ரசித்து பார்ப்பது பலரின் பழக்கம் தான். எப்படி அணிகளின் மீது மோகம் இருக்கின்றதோ, அதே போல தனிப்பட்ட வீரர்களின் மீதான அபிமானமும் தான்.
இந்திய நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால் தான் போட்டி சுவாரஸியமாக மாறி விடுகிறது. கடந்த 2013, 2016 ஐபில் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கே.எல்.ராகுல் மீண்டும் அதே அணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் ராகுல், பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் சொல்லியுள்ளது. சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஃபாஃப் டூப்ளிசிஸ் தான் பெங்களூரு அணியின் இப்போதைய கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு…
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.…