ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயில் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் வைத்து பூரன் இந்த சாதனையை படைத்தார். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் (டிகேஆர்) மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் (பேட்ரியட்ஸ்) அணிகளிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டில் க்ரிஸ் கெயில் 135 சிக்சர்களை விளாசியிருந்தார். இந்த ஆண்டில் இதுவரை மட்டும் நிக்கோலஸ் பூரன் 139 சிக்சர்களை விளாசியிருக்கிறார். இதன் மூலம் அவர் க்ரிஸ் கெயில் சாதனையை தகர்த்துள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் பூரன் 43 பந்துகளில் 97 ரன்களை விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகளும், ஒன்பது சிக்சர்களும் அடங்கும்.
ஒரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் க்ரிஸ் கெயில் டாப் 10-இல் ஆறு முறை முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுளும் அதன்பிறகு 2015, 2016 மற்றும் 2017 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் க்ரிஸ் கெயில் ஒரே ஆண்டில் அசித சிக்சர்களை விளாசியுள்ளார்.
எனினும், நிக்கோரஸ் பூரன் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஆண்டில் இதுவரை 58 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிக்கோலஸ் பூரன் 139 சிக்சர்களை விளாசியுள்ளார். இதில் அவர் 13 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
நேற்றைய போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய பூரன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக டிகேஆர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பேட்ரியட்ஸ் அணி 206 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டிகேஆர் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…