Categories: Cricket

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? முன்னாள் வீரர் சொன்னது இதுதான்..!

இந்திய கிரிக்கெட் அணியில் அதிக திறமை மிக்க வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இவரது எதிர்காலம் அத்தனை சிறப்பாக அமையாமல் உள்ளது. தொடர்ச்சியாக அணியில் சேர்க்கப்படாமல் சஞ்சு சாம்சன் தனக்கான வாய்ப்புக்காக தள்ளாடி வருகிறார்.

கடைசியாக இந்திய அணிக்காக அவர் களமிறங்கிய ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போதிலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய ஒருநாள் அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தான் இருக்கிறது. சஞ்சு சாம்சன் நிலை இப்படி இருப்பது பற்றிய கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டருக்கு இவ்வாறு நடைபெறுவது முதல்முறை இல்லை. இது கடைசியாகவும் இருக்காது என்று கூறினார். சஞ்சு சாம்சனை பொருத்தவரை இதுபோன்ற சூழல் அவருக்கும் புதிதல்ல. ஒரு வீரராக இது கடைசியாகவும் இருக்காது. ஒருநாள் போட்டிகளில் அவரின் எண்ணிக்கை மிகவும் அபாரமாகவே இருக்கிறது.

தற்போது அணியில் தலைமை மாறி இருக்கிறது, ஏராளமான விஷயங்கள் மாறி இருக்கிறது. இவை அனைத்தும் ஒற்றுப் போக சிறிது நேரம் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர், ஆதரவாளர்கள் என்ற வகையில், நாம் இதுபோன்ற விஷயங்கள் அமைதி கொள்ள தேவையான நேரம் கொடுக்க வேண்டும்.

என்னை பொருத்தவரையில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் நாம் சற்று நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு வாய்ப்புகள் வரும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அணியில் தொடர்ந்து இடம்பிடிக்கலாம் என்று ராபின் உத்தப்பா மேலும் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

5 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

41 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago