Categories: Cricket

இப்போ இதுமட்டும் தான் என் கண்ட்ரோல்-ல இருக்கு – சூர்யகுமார் யாதவ்

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். நாக்பூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடிய சூர்யகுமார் அதன்பிறகு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தார். அதன்பிறகு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் சூர்யகுமார் யாதவ் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். முதற்கட்டமாக புச்சி பாபு கோப்பை தொடரிலும், அதன்பிறகு நடைபெற இருக்கும் துலீப் கோப்பை தொடரிலும் சூர்யகுமார் களமிறங்க உள்ளார். இதனிடையே மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது பற்றி சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க பல வீரர்கள் கடுமையாக உழைத்து, அந்த இடத்திற்கு வந்துள்ளனர். நானும் அப்படியே டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியதும், எனக்கு காயம் ஏற்பட்டு விட்டது. வாய்ப்பு வழங்கப்பட்ட பல வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்கள் அணியில் இருக்க தகுதி வாய்ந்தவர்கள்.”

“தற்போதைக்கு நான் அணியில் விளையாட வேண்டுமானால், அந்த முடிவை எடுக்கும் இடத்தில் நான் இல்லை. தற்போது என் கட்டுப்பாட்டில் இருப்பது நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதாக மட்டும்தான். இதைத் தொடர்ந்து துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்,” என்று சூர்யகுமார் யாதவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago