Categories: Cricket

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – பாக். வங்காளதேச தொடரில் புது டுவிஸ்ட், ஏன் தெரியுமா?

கொரோனா காலக்கட்டம் போன்றே ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டியை நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

அந்த வகையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக மைதானத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதே, ரசிகர்கள் அனுமதிக்கப்படாததற்கு காரணம் ஆகும்.

“எஞ்சியுள்ள வழிமுறைகள் என்னென்ன என்பதை கவனமாக ஆய்வு செய்து, நாங்கள் எடுக்கக்கூடிய மிக பாதுகாப்பா முடிவு, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்பதாகவே இருக்க முடியும். இந்த போட்டியை காண ஏற்கனவே டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்களுக்கு முழு பணமும் திரும்ப வழங்கப்பட்டு விடும். டிக்கெட் வாங்கிய போது அளித்த வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு அவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்.”

“இதன் மூலம் ஏற்படக்கூடிய இன்னல்களுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும். இந்த பணிகள் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago