Categories: Cricket

ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா- முதல் முறை மவுனம் களைத்து பேசிய பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்

பிசிசிஐ தலைவராக இருக்கும் ஜெய் ஷா கடந்த மாதம் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் ஜெய் ஷாவிற்கு கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்காக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், அதன் உறுப்பினர்களான 16 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் ஐசிசி தலைவராக ஜெய் ஷாவை தேர்வு செய்ய பாகிஸ்தான் தவிர்த்து மற்ற 15 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை என பாகிஸ்தான் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.

ஐசிசி தலைவர் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்ட காலம் அமைதி காத்த நிலையில், தற்போது அதன் தலைவர் முதல் முறையாக மவுனம் களைத்து பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி, “நாங்கள் ஜெய் ஷாவுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறோம், அவர் ஐசிசி தலைவர் ஆவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.”

“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) மற்றும் நாளை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக சல்மான் நசிர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் புதிய தலைவர் விவகாரம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டும்,” என்று மொசின் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago