Categories: Cricket

கடின உழைப்பால் ஜெயித்துள்ளீர்கள்.. இதுதான் சரி – மோடியின் செயல் வைரல்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியினர் தங்கியிருந்த பார்படோஸில் புயல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் இந்திய வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை நாடு திரும்பியது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வந்தடைந்த இந்திய வீரர்களை வரவேற்க ரசிகர்கள் அதிகாலை 3 மணியில் இருந்தே விமான நிலையம் வரத்துவங்கினர். காலை 6 மணி அளவில் விமானம் வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் சுமார் 7 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு சென்றனர். அங்கு இந்திய வீரர்களுக்கு மேளதாளங்களுடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓட்டலில் இருந்து இந்திய வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உலகக் கோப்பையை வழங்கினர். வீரர்களை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு காலை உணவை விருந்தளித்து உபசரித்தார். பிறகு, வீரர்களுடன் உரையாற்றிய மோடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவ்வாறு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் புகைப்படத்தில் பிரதமர் மோடி டி20 உலகக் கோப்பையில் கையை வைக்காமல், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கைகளை பிடித்து இருப்பது தெரியவந்துள்ளது. உலகக் கோப்பையுடன் தன்னை சந்திக்க வந்துள்ள வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி, கோப்பையை கையில் ஏந்தாமல் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago