Categories: Cricket

IPL 2025-ல் டோனி.. Rules பேசும் அஸ்வின்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், ஓய்வு குறித்து எம்எஸ் டோனியும் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல சவால்கள் காத்திருப்பதாகவே தெரிகிறது. இது தொடர்பாக இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் சென்னை அணி எம்எஸ் டோனியை அணியில் தக்க வைத்துக் கொள்வதற்கு கடுமையாக போராடி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஐபிஎல் விதிமாற்றங்களை செய்யவும் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த ஆகஸ்ட் 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் விரைவில் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. எனினும், சென்னை அணி எம்எஸ் டோனியை அணியில் வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. இதற்காக ஐபிஎல் விதிகளை மாற்றி, எம்எஸ் டோனியை அன்கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்க்க முடியுமா என்பதில் சிஎஸ்கே அணி தீவிரம் காட்டி வருகிறது.

முந்தைய ஐபிஎல் விதிப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றதும் அன்கேப்டு பிரிவில் சேர்க்கப்படுவர். ஆனால் இந்த விதிமுறை 2021 ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது எம்எஸ் டோனியை அணியில் வைத்துக் கொள்ள இந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சென்னை அணி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரவிசந்திரன் அஸ்வின் கூறும் போது, “எம்எஸ் டோனி அன்கேப்டு வீரராக விளையாடுவாரா என்பது பெரிய கேள்வி? இந்த விஷயத்தில் பாயின்ட் சரி தான். அவர் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அந்த வகையில் அவர் அன்கேப்டு வீரர் தான். அவர் கேப்டு வீரர் இல்லை.”

“டோனி போன்ற வீரர் அன்கேப்டு வீரராக விளையாட முடியுமா? இது பேசுபொருளாக இருக்கும். உண்மையில் டோனி பற்றி யாரேனும் பேசினால், நிச்சயம் அனைவரும் இதுபற்றி பேசுவார்கள்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

15 mins ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

30 mins ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

3 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

4 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

4 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

5 hours ago