Categories: Cricket

ஆக்ரோஷ Celebration, மனம்திறந்த டிராவிட்

டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை கையில் வாங்கியதும், அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொண்டாடிய விதம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்ற தருணங்களில் கூட அத்தகைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை.

எனினும், பார்படோஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி 11 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக் கோப்பையை கையில் வாங்கிய ராகுல் டிராவிட் மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

மகிழ்ச்சியில் அவர் துல்லி குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கோப்பையை பெற்ற ராகுல் டிராவிட் சில நொடிகளுக்கு திடீரென குழந்தையாக மாறி சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார். அதுவரை ராகுல் டிராவிட் அப்படி கொண்டாடி யாரும் பார்த்திருக்கவில்லை.

இந்த நிலையில், ராகுல் டிராவிட் தனது ஆக்ரோஷ கொண்டாட்டம் குறித்து முதல் முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

இதுபோன்ற விஷயங்களை திட்டமிட முடியாது. பெரும்பாலான சமயங்களில் நான் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே நினைப்பேன். ஒரு பயிற்சியாளரிடம் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அந்த சமயம், நான் அணிக்காக அதிகம் மகிழ்ச்சி அடைந்தேன்.

பசங்க (வீரர்கள்), உதவியாளர் குழு என் என்னுடன் கடுமையாக உழைத்த அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் அணியுடன் 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை பயணித்தேன். சில சமயங்களில் கடைசி வரை சென்றிருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என பல முக்கிய தொடர்களில் இறுதிவரை வந்து, கடைசி கோட்டை எங்களால் கடக்க முடியாமல் இருந்தது.

அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சிறிதளவு அதிர்ஷ்டம் நம் பக்கம் தேவைப்படும். அன்றைய தினம் அது எங்களுக்கு சாதகமாக இருந்தது, என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago