Categories: Cricket

என் வாழ்க்கையிலேயே சிறந்த போன் கால்.. மனம்திறந்த ராகுல் டிராவிட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என ஐசிசி கோப்பை தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு நீண்டு கொண்டே இருந்தது.

அந்த வரிசையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் இருந்து வந்தது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

உலகக் கோப்பை வெற்றியுடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர்.

இவர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார். அந்த வகையில், இந்த கோப்பையை வென்றதில் பல்வேறு எமோஷனல் கதைகள் அடங்கியுள்ளன.

உலகக் கோப்பை வெற்றி குறித்து ராகுல் டிராவிட் நெகிழந்து பேசினார். முன்னதாக, போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் டிரெசிங் ரூமில் உரையாற்றிய ராகுல் டிராவிட் தனக்கு வந்த நவம்பர் போன் கால் பற்றி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பாராட்டு விழாவில் அந்த போன் கால் பற்றிய கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு தொடர்வதில் அதிக உறுதியாக நான் இருக்கவில்லை. உலகக் கோப்பை தொடர் சிறப்பாகவே முடிந்த போதிலும், இந்திய அணி அந்த கோட்டை கடக்க முடியாமல் போனதில் அதிக ஏமாற்றங்கள் நிரம்பி இருந்தது.

அப்போது தான் ரோகித் சர்மா என்னை போனில் தொடர்பு கொண்டார். அப்போது இன்னும் 6-இல் இருந்து 8 மாதங்கள் வரை நேரம் உள்ளது. நாம் இருவரும் இணைந்து இதனை வெற்றிகரமாக நிறைவுசெய்தால் அருமையாக இருக்கும் என்று தெரிவித்தார். தற்போது என் வாழ்நாளில் மிகமுக்கிய போன் காலாக அது எப்போதும் இருக்கும்.

இந்த அன்பை நான் இழப்பேன். இன்று இங்கு நாங்கள் பார்த்தவை மிகவும் அலப்பறியது. ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் இந்த போட்டியின் மீது வைத்த மதிப்பு தான், இந்த போட்டி இப்படி இருக்க முக்கிய காரணம். நாங்கள் உண்மையில் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

49 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago