இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், திரைப்படங்களில் நடிப்பது பற்றி பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்டர், ரசிகர்கள் மத்தியிலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் நன்மதிப்பை பெற்ற வீரராக ராகுல் டிராவிட் உள்ளார். எனினும், இவர் காலக்கட்டத்தில் ஒருமுறை கூட உலகக் கோப்பையை ஏந்தவில்லை என்ற குறை நீண்ட காலம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், சமீபத்திய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்றது. இதன் மூலம் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற 11 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்தது. கோப்பையை வென்ற இந்திய அணி, அதனை அப்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கொடுத்து அழகு பார்த்தது. மேலும், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை வெற்றியோடு நிறைவு செய்து கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ராகுல் டிராவிட் தனது பயோபிக் திரைப்படத்தில் எந்த நடிகர் நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். கேள்வி கேட்கப்பட்டதும், ராகுல் டிராவிட் தயக்கமின்றி டைமிங்கில் கொடுத்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகறது.
அதன்படி, “நல்ல பணம் கொடுக்கிறார்கள் என்றால், அந்த கதாபாத்திரத்தில் நானே நடித்துவிடுவேன்,” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் இடையில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றன என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.
அப்போது, “உண்மையில், வித்தியாசமாக எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. ரோகித் தலைமையிலான அணியில் ஒவ்வொருத்தரும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். எங்களுக்கு அந்த தொடர் அருமையாக அமைந்தது.”
“தயார்படுத்திக் கொள்வது, திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்துவது என எதிலும் எங்களால் அதைவிட மேலோங்கி செயல்பட்டிருக்க முடியாது. தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவதற்கு ஏற்ற அனைத்தையும் செய்தோம். நான் எதையும் மாற்ற நினைக்கவில்லை. எங்களது குழுவுடன் ஆலோசிக்கும் போது என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.”
“அத்தகைய கேள்விக்கு நாங்கள் அப்போது செய்த எல்லாவற்றையும், மீண்டும் செய்வது சரியாக இருக்கும் என்று ஒருமனதாக முடிவு எடுத்தோம். நாங்கள் அதே சக்தியை உருவாக்கி, அதே வைபை உருவாக்கி அப்போதிருந்த அணி சூழலை உருவாக்க நினைத்தோம். அன்றைய தினம் எங்களுக்கு சிறிதளவு அதிர்ஷ்டம் கிட்டும் என்று நம்பினோம்,” என்று தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…