Categories: Cricket

ஐபிஎல் ரீ-எண்ட்ரி: டிராவிட் இணையப் போகும் அணி இதுதானா?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் வெற்றிகரமாக விடைபெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் வாழ்க்கையில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதில் இருந்து, ராகுல் டிராவிட் ஐபிஎல் அணிகளில் இணைவது தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் வெளியான தகவல் ஒன்று ராகுல் டிராவிட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இணைய இருப்பதாக கூறியது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில், ராகுல் டிராவிட் கொல்கத்தா அணியில் இணையலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராகுல் டிராவிட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. “ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராகுல் டிராவிட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,” என்று தகவல் ஒன்று கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்தியாவில் இருந்து இலங்கை புறப்படும் முன் பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்த காரியங்களை மனதில் வைத்து, பயிற்சியாளராக மிகப்பெரிய இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா தோற்கடித்து, கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் பேசிய ராகுல் டிராவிட், அடுத்த மாதம் துவங்கி எனக்கு வேலையில்லை, உங்களுக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள் என்று நக்கலாக தெரிவித்து இருந்தார்.

இந்திய கிரிக்கெட்டில் அலாதியான அனுபவம் மிக்கவர் டிராவிட். இதுதவிர இந்திய கிரிக்கெட்டில் இவரது அனுபவம் பல சாதனைகளை படைத்துள்ளது. இதன் காரணமாக பல ஐபிஎல் அணிகள் ராகுல் டிராவிட்-ஐ தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரிகிறது.

பத்து மாதங்கள் பயணத்திலேயே இருப்பது, குடும்பத்தை பிரிந்து இருப்பது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். எனினும், ஐபிஎல் தொடர் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. இதில் ராகுல் டிராவிட் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை அணியுடன் இருந்தாலே போதுமானது.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

2 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

2 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

5 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

6 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

7 hours ago