இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியை அறிவித்து இருக்கிறார். இவரது இந்த அணியில் ஏழு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டன் பொறுப்பை அவர் ரோகித் சர்மா, விராட் கோலி என இருவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் இந்த பட்டியலில் பல முன்னணி வீரர்களும் இடம்பெறவில்லை.
க்ரிஸ் கெயில், பொல்லார்ட், ஆண்ட்ரெ ரசல், கவுதம் கம்பீர் போன்ற முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. மேலும், இந்த அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நான்கு பேரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அஸ்வினின் ஆல்-டைம் ஐபிஎல் பிளேயிங் 11 பட்டியல்
இந்திய அணியின் முன்னாள் வீரர் க்ரிஸ் ஸ்ரீகாந்த்-இன் யூடியூப் சேனல்- சீக்கி சீக்கா-வில் நடைபெற்ற உரையாடலின் போது ரவிசந்திரன் அஸ்வின் இந்த அணியை அறிவித்தார்.
முன்னதாக இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றொரு நிகழ்ச்சியில் பேசும் போது அறிவித்த தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியில் எம்எஸ் டோனிக்கு இடம் அளிக்காமல் விட்டது பெரும் பேசு பொருளாக மாறியது. எனினும், அஸ்வின் தனது அணியில் எம்எஸ் டோனியை தேர்வு செய்ததோடு, அவருக்கே உரிய கேப்டன் பொறுப்பும் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…