இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கிறார். கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் அதன்பிறகு கார் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
பிறகு, நீண்ட காலம் கழித்து தற்போது மீண்டும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே மீண்டும் கம்பேக் கொடுக்க இருக்கிறார். டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் மற்ற வகை கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரிஷப் பண்ட், யாரும் மறக்க முடியாத அளவுக்கு தலைசிறந்த இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பற்றி பேசியுள்ளார்.
“அது உண்மையில் அற்புதமான உறவு. ரவி சாஸ்திரியுடன் சிறப்பான புரிதல் எனக்கு இருந்தது. அவர் எனக்கு தேவையான சுதந்திரத்தை கொடுத்தார். குறிப்பிட்ட விஷயத்தை செய்யக்கூடாது என்று யாரேனும் என்னிடம் கூறினால் எனக்கு அது பிடிக்காது. மாறாக, இப்படி செய்யலாம் என்று யாரும் எதுவும் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வேன். முழுமையாக ஒரு விஷயத்தை தவிர்ப்பதற்கு பதிலாக, சிறப்பான ஆப்ஷனை எடுத்துக் கொள்வேன்.”
“ஒரு சமயத்தில் நான் ஆஃப்-ஸ்பின்னர்களிடம் எளிதில் அவுட் ஆகி வந்தேன். அப்போது என்னிடம் என்ன சொல்ல வேண்டும் என்று ரவி பாய் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னிடம் அவர் கூறியது- ஆஃப் ஸ்பின்னரை எதிர்கொள்ள நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக ஸ்வீப் ஷாட் விளையாட வேண்டும், இது டெஸ்ட் கிரிக்கெட் சார்ந்தது,” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…