Categories: Cricket

கழட்டிவிடும் டெல்லி.. டோனி போன்று ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்.. ஒருவேளை இருக்குமோ?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரில், எந்தெந்த வீர்ர்கள் எந்த அணிக்காக விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஐபிஎல் ஏலம் தூண்டிவிடும்.

அந்த வகையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகள் இடையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதேடு, முன்னணி வீரர்கள், நீண்ட காலம் ஒரே அணியில் இடம்பெற்ற வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படியாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2025 ஐபிஎல் தொடரில் வேறொரு அணிக்காக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவல்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் கேப்டன்சியில் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கால் மூட்டு பகுதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள எம்எஸ் டோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே கடைசி ஓவர்களில் மட்டும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் டோனி, கேப்டன்சி பொருப்பை ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வழங்கினார்.

ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகலாம் என்ற தகவலும், சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனி தொடர்வாரா என்ற கேள்வியும் ஒருசேர எழுந்துள்ளது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் தனது சமூக வலைதள பதிவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-இன் கபாலி பட புகைப்படத்துடன், அதே போன்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தலைப்பில் “தலைவா” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அணி மாற்றம் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் சூழலில், ரிஷப் பண்ட்-இன் சமூக வலைதள பதிவு அவர் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இணைவார் என்பதை குறிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக எம்எஸ் டோனி, ரஜினிகாந்த்-இன் கபாலி பட போட்டோ ஒன்றை பதிவிட்டு, அத்துடன் அதே போசில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படத்தையும் பதிவிட்டார். இதற்கான தலைப்பில் அவர், “ஒரே ஒரு தலைவரின் போஸை காப்பியடிக்க முயற்சி செய்தேன்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

3 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

11 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

32 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago