இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஐசிசியின் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தில் உள்ளார். இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான ஹாரி புரூக் 56 மற்றும் 32 ரன்களை விளாசினார். இதன் பலனாக இவர் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார்.
இவர் பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் ரோகித் சர்மா ஆகியோரை முந்தியுள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆறு இடங்கள் பின்னோக்கி சென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளார். முன்னதாக மூன்றாவது இடத்தில் இருந்த பாபர் அசாம் தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்லான் ஏழு இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தில் உள்ளார். வங்கதேசம் அணியின் முஷ்பிகுர் ரஹிம் டெஸ்ட் வரலாற்றில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளார். இவர் தற்போது 17 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவிசந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே மூன்று மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் க்ரிஸ் வோக்ஸ் நான்கு இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தில் உள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…