இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டி கொலம்போவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி பேட் செய்த போது, ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
போட்டியின் 29 ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட இலங்கை அணி வீரர் துனித் வெல்லலக அதனை தடுத்து ஆட முயன்றார். இந்த பந்திற்கு இந்தியா எல்பிடபில்யூ (LBW) அப்பீல் கோரியது. எனினும், மற்ற வீரர்கள் விக்கெட்டுக்கு நம்பிக்கை தெரிவிக்கவில்லை. அம்பயரும் அது அவுட் என நினைக்கவில்லை.
இருந்தும் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் அப்பீல் கேட்டதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்ற வீரர்களிடம் அந்த பந்தை ரிவ்யூ கேட்கலாமா என்று கேட்டார். ஆனால், அதற்கு மற்ற வீரர்கள் உறுதியான பதில் அளிக்கவில்லை. உடனே ரோகித்-ஐ பார்த்த வாஷிங்டன் சுந்தர் ரிவ்யூ கேட்கலாமா என்பது போல் பாவனை செய்தார்.
உடனே ரோகித் கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும், அதற்கு ரோகித் தெரிவித்த கமென்ட் என்ன என்பதும் தெரியவந்துள்ளது. “என்ன, நீ எனக்கு சொல்கிறாயா? ஏன் என்னை பார்க்கிறாய்? உனக்காக எல்லாவற்றையும் நான்தான் செ்யய வேண்டுமா?” என்று கேட்ட ரோகித் சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.
இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை சேர்த்தது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…