Categories: Cricket

LSG-இல் ரோகித் சர்மாவுக்கு ₹50 கோடி.. அணி உரிமையாளர் சொன்னது என்ன?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் என்பதால், இது ஒவ்வொரு அணியிலும் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முறை ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இதுவரை எவ்வித தெளிவான முடிவும் வெளியாகவில்லை.

எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி ஏராளமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த அணியில் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ரோகித் சர்மா, மும்பை அணிக்கு கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, மூத்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர்.

இதில் எத்தனை வீரர்களை மும்பை அணி அடுத்த சீசனுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை தங்களது அணியில் வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிடுவதாக தெரிகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோகித் சர்மாவை ரூ. 50 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா, “எனக்கு ஒன்பறை மட்டும் சொல்லுங்கள், ரோகித் சர்மா ஏலத்திற்கு வருகிறாரா, இல்லையா? இந்த தகவல்கள் அனைத்தும் எவ்வித காரணமும் இன்றி கூறப்படுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை விடுவிக்குமா? அவர் ஏலத்திற்கு வருவாரா என்பது தெளிவற்ற நிலையில்தான் உள்ளது.”

“ஒருவேளை அவர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அணியின் 50 சதவீத சம்பளத்தை ஒரு வீரருக்கு எப்படி கொடுக்க முடியும். அவர் தவிர மேலும் 22 வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு விருப்பப்பட்டியல் இருக்கும். உங்களகுக்கு சிறந்த வீரர், சிறப்பான கேப்டன் உங்கள் அணியில் இருக்க வேண்டும். ஆனால், ஆசையை தாண்டி, உங்களிடம் என்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.”

“உங்களிடம் இருப்பதை வைத்து என்ன செய்ய முடியும். அது தான் விஷயமே. எனக்கு யார் வேண்டுமானாலும் தேவைப்படலாம். ஆனால் அதே விஷயம் எல்லா அணிகளுக்குமே இருக்கும். உங்களுக்கு எல்லாமே கிடைத்துவிடாது,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago