இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் டி20 கிரிக்கெட்-இல் ஓய்வை அறிவித்தார். உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டுகளித்தார். இதைத் தொடர்ந்து டள்ளாஸ்-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, சமீபத்தில் தான் தெரிவித்தேன். நான் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்க மாட்டேன். இதனால் இன்னும் சில காலம் நிச்சயம் விளையாடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரோகித் சர்மா, 4231 ரன்களை விளாசியுள்ளார். மேலும், இந்த வகை கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஐந்து சதங்களை விளாசியுள்ளார். இதோடு 2007 மற்றும் 2024 என இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி அறிவித்தார். இந்திய அணி உலகக் கோப்பை வென்றதும் விராட் கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…