டி20 உலகக் கோப்பை தொடரில் அபார வெற்றி பெற்ற கையோடு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ரோகித் சர்மாவை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.
குடும்பத்தாருடன் விமான நிலையம் வந்த ரோகித் சர்மாவை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் ரோகித் சர்மாவை பார்த்ததும் ஆரவாரம் செய்து, அவரை வரவேற்று மகிழ்ந்தனர். பலர், அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். சிலர் அவருடன் எப்படியாவது புகைப்படம் எடுத்திட வேண்டும் என்று அவரிடம், ஒரேயொரு செல்பி எடுக்கலாமா என்று கேட்டனர்.
தனது மனைவி ரித்திகா சஜெத், மகள் சமைரா ஆகியோருடன் விமான நிலையம் வந்த ரோகித் சர்மா, காரில் ஏற முற்படும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். அவர்களை விரட்ட மனமின்றி சிலருடன் செல்பி எடுத்துக் கொண்ட ரோகித் சர்மா, சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். எனினும், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று தேர்வுக்குழு மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…