இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் இணைந்து, எதிர்கால போட்டித் தொடர்களுக்கு ஆயத்தமாகி வருகிறது.
தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்நோக்கி உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன் பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா, கிரிக்கெட்டை தவிர்த்த சில காலம் அருமையாக இருந்தது. உலகக் கோப்பை வென்று தாயகம் திரும்பியது தலைசிறந்த அனுபவங்களை கொடுத்தது. டெல்லி மற்றும் மும்பையில் நாங்கள் அனுபவித்தது மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், அதில் இருந்து வெளியே வரவேண்டும், கிரிக்கெட் நகர்ந்து கொண்டே இருக்கும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் செய்த அனைத்தும் அந்த நேரத்தில் நன்மைக்கான ஒன்றுதான். ஆனால் காலம் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப நாமும் முன்னோக்கி நகர வேண்டும். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இதுதான் நடந்தது. அதிகளவு ஏமாற்றம் இருந்தது, ஆனாலும் நாங்கள் அதை கடந்து வந்து இந்த உலகக் கோப்பை மீது கவனம் செலுத்தினோம்.
தற்போது டி20 உலகக் கோப்பை முடிந்துவிட்டது. தற்போது ஒரு அணியாக அடுத்த என்ன என்பதை தான் பார்க்க வேண்டும். இந்த வகையில், பல பெரிய தொடர்கள் துவங்க உள்ளன. அவற்றை எதிர்நோக்கி இருக்கிறோம், என்று தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த…
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…