Categories: Cricket

எனக்கு பக்கபலம் கொடுத்த மூன்று பேர்.. ரோகித் சர்மா நெகிழ்ச்சி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனகக்கு பக்கபலமாக செயல்பட்ட மூன்று பேருக்கு நன்றி தெரிவித்தார். இந்த மூவர் பட்டியலில் சமீபத்திய டி20 உலகக் கோப்பை தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா என யாரும் இடம்பெறவில்லை.

மாறாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களது ஒத்துழைப்பு இருந்ததால் தான், போட்டி முடிவுகள் பற்றி கவலையின்றி வீரர்களின் முழு திறமையை வெளிப்படுத்த செய்ய முடிந்தது என ரோகித் சர்மா தெரிவித்தார்.

“புள்ளி விவரங்கள், போட்டி முடிவுகள் பற்றி கவலை இன்றி அணியை மாற்றுவது எனது கனவாக இருந்தது. இப்படி ஒரு சூழலை உருவாக்கும் போது, வீரர்கள் முழு சுதந்திரத்தோடு களத்தில் அதிகம் யோசிக்காமல் விளையாடுவார்கள். இது தான் அவசியம் தேவையான ஒன்று. அந்த வகையில் எனக்கு திரு. ஜெய் ஷா, திரு ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் என மூவரும் பக்கபலமாக இருந்தனர்.”

“நான் செய்ய விரும்பியதை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். இந்த விஷயத்தில் வீரர்களை மறந்துவிட முடியாது. அவர்கள் தான் இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்கு தேவையான முடிவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தினர்.”

“இந்த உணர்வுகள் தினமும் கிடைத்துவிடாது. நாங்கள் உண்மையில் நம்பிக் கொண்டிருந்த விஷயம் அது. நாங்கள் உலகக் கோப்பையை வெல்லும் போது, அந்த தருணத்தை முழுமையாக கொண்டாடுவது எங்களுக்கு முக்கியமாக இருந்தது. இதோடு ஒட்டுமொத்த தேசமும் எங்களுடன் கொண்டாடுவது, நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது முக்கியம் ஆகும்,” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது வழங்கும் விழாவில், ஆண்கள் கிரிக்கெட்டில் ஆண்டின் தலைசிறந்த வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது வழங்கும் விழாவில் தான் ரோகித் சர்மா இவ்வாறு பேசினார்.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

5 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

12 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

33 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago